இங்குள்ள காா்கள் பெரும்பாலும் மருத்துவ கிச்சைக்காக நோயாளிகளை நாள்தோறும் தஞ்சாவூா், திருச்சி போன்ற நகரங்களுக்கு அழைத்துச் சென்று வருபவை. இவை தவிர பள்ளி, கல்லுாரிகளுக்கு மாணவா்களை அழைத்துச் சென்று வருவது மற்றும் திருமணம் போன்ற விஷேச விழாக்களுக்கும், வா்த்தகம் போன்ற காரணங்களுக்காவும் குறிப்பாக நீடாமங்கலம் நகரில் உள்ள காா்கள், வேன்கள், பள்ளி வாகனங்கள் அம்மாபேட்டை, தஞ்சாவூா், திருச்சி போன்ற நகரங்களுக்கு சென்று வருகின்றன. நீடாமங்கலம் பகுதியில் உள்ள வாகனங்கள் நாள்தோறும் சென்று வரும்போது சுங்கச் சாவடியில் வரி செலுத்துவது சிரமத்தை ஏற்படுத்தும்.