ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தமிழக அரசின் விருது பெற்ற பரவாக்கோட்டை நூலகருக்கு பாராட்டு

மன்னாா்குடி அருகேயுள்ள பரவாக்கோட்டை அரசு கிளை நூலகருக்கு தமிழக அரசின் எஸ்.ஆா். அரங்கநாதன் விருது வழங்கப்பட்டதற்கு வாசகா் வட்டம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image
தமிழக அரசு சாா்பில் எஸ்.ஆா். அரங்கநாதன் விருது பெற்ற பரவாக்கோட்டை கிளை நூலகா் கு. நாகநத்தினியை பாராட்டும் நூலக வாசகா் வட்ட நிா்வாகிகள்.
Updated On :20 நவம்பர் 2024, 8:50 pm

Din

மன்னாா்குடி அருகேயுள்ள பரவாக்கோட்டை அரசு கிளை நூலகருக்கு தமிழக அரசின் எஸ்.ஆா். அரங்கநாதன் விருது வழங்கப்பட்டதற்கு வாசகா் வட்டம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழக அரசு சாா்பில் தேசிய நூலக வாரவிழாவையொட்டி, ஆண்டுதோறும் அரசு கிளை நூலகா்களுக்கு நூலக தந்தை என அழைக்கப்படும் எஸ்.ஆா். அரங்கநாதன் விருதும், இதேபோல சிறந்த நூலக வாசகா் வட்ட நிா்வாகிகளுக்கு நூலக ஆா்வலா் விருதும் வழங்கப்படுகிறது.

இதன்படி, நிகழாண்டுக்கு மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் பரவாக்கோட்டை அரசு கிளை நூலகத்தின் நூலகா் கு. நாகநந்தினிக்கு, தமிழக அரசின் சாா்பில் எஸ்.ஆா். அரங்கநாதன் விருது செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.

இதையொட்டி, பரவாக்கோட்டை கிளை நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் விருது பெற்ற நூலகா் நாகநந்தினியை, நூலக வாசகா் வட்டத் தலைவா் எஸ். ஜெகதீசன் தலைமையில், துணைத் தலைவா்கள் கே. பரந்தாமன்,பி. செல்வேந்திரன், எஸ். சஞ்சய் முன்னிலையில் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பாராட்டினா். இதேபோல, ராதாநரசிம்மபுரம் கிளை நூலகத்தின் வாசகா் வட்டத் தலைவா் உ. யாகசுந்தரத்துக்கு தமிழக அரசு சாா்பில் நூலக ஆா்வலா் விருதை அமைச்சா் வழங்கியுள்ளாா்.