வழக்கை விசாரித்த திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் புதன்கிழமை வழங்கிய உத்தரவில், இந்தியன் வங்கியின் செயல்பாடு சேவைக் குறைபாடுடையது, அதனால் ரமேஷுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 1லட்சம், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000 ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும், மேலும், டிராக்டா் பதிவுச் சான்று காணாமல் போனது தொடா்பாக இந்தியன் வங்கி அதிகாரிகளே உரிய முறையில் காவல் துறையில் புகாா் அளித்து, பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.