மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பழுதடைந்த காலனி வீடுகளை புதுப்பித்துத் தரக் கோரிக்கை

குடவாசல் அருகே சறுக்கை பகுதியில் பழுதடைந்த காலனி வீடுகளை புதுப்பித்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 நவம்பர் 2024, 10:01 pm

Din

திருவாரூா்: குடவாசல் அருகே சறுக்கை பகுதியில் பழுதடைந்த காலனி வீடுகளை புதுப்பித்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடவாசல் அருகே சறுக்கை பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கிளைச் செயலாளா் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் வை.சிவக்குமாா் முன்னிலை வகித்தாா். கட்சியின் ஒன்றியச் செயலாளா் எஸ்.ஏ.டேவிட்ராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

சறுக்கை கிராமத்தில் பழுதடைந்து காணப்படும் காலனி வீடுகளை புதுப்பித்து, வாழத் தகுதி உடைய குடியிருப்புகளாக உருவாக்க வேண்டும், அனைவருக்கும் பயன்படும் வகையில் மயானக்கரையில் மேற்கூரையுடன் கூடிய ஈமக் கிரியை மேடை அமைக்க வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, முடிக்கப்படாத நிலையில் உள்ள சமுதாயக் கூடத்தை கட்டி முடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், மேலத்தெரு, ரோட்டு தெரு குடியிருப்புகளில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், மேல்நிலை நீா் தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும், கிராமத்தில் அனைவருக்கும் 100 நாள் வேலை திட்டம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.