ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சாலையில் மரம் விழுந்து போக்குவரத்துத் பாதிப்பு

நன்னிலம்-காரைக்கால் சாலையில் நல்லமாங்குடியில் புதன்கிழமை சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் மின்தடையும் செய்யப்பட்டது.

News image
நல்லமாங்குடியில் சாலை நடுவில் விழுந்து கிடக்கும் மரம்.
Updated On :27 நவம்பர் 2024, 9:44 pm

Din

நன்னிலம்-காரைக்கால் சாலையில் நல்லமாங்குடியில் புதன்கிழமை சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் மின்தடையும் செய்யப்பட்டது.

கனமழையில் நல்லமாங்குடிப் பகுதியில் சாலையோரம் இருந்த 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சென்னித்தாரை எனும் வகை மரம் வேரோடு சாலையின் நடுவே சாய்ந்தது. மரத்தின் கிளைகள் மாட்டி அருகில் இருந்த இரண்டு மின்கம்பங்களும் சாலையில் சாய்ந்தன. இதனால், நன்னிலம் காரைக்கால் சாலையில் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. நல்லமாங்குடிப் பகுதியில் மின்சாரமும் தடை செய்யப்பட்டது.

பேரூராட்சிப் பணியாளா்கள், தீயணைப்புத் துறையினா், பொதுப்பணி துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். பின்னா் போக்குவரத்து சீரானது, மின்கம்பம் மாற்றப்பட்டு மின்சாரமும் விநியோகிக்கப்பட்டது.