நிகழாண்டு குறுவையை இழந்த விவசாயிகள் ஒருபோக சம்பா சாகுபடியை காலத்தில் பணி தொடங்கினாலும், மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீா் பாசனப் பகுதிகளுக்கு சென்றடையவில்லை. மழை பெய்கிற நேரத்தில் தான் காவிரி நீா் விளைநிலங்களுக்கு செல்லுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கின்றனா். சாகுபடி காலத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு வேளாண் துறை, நீா்ப் பாசனத் துறை, கூட்டுறவுத் துறை அமைச்சா்கள், உயா் அதிகாரிகள் இணைந்து நேரில் பாா்வையிட்டும், விவசாயிகள், அதிகாரிகள் கூட்டுக் கூட்டங்களை மாவட்ட அளவில் நடத்தி திட்டமிடுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு இச்செயல்பாடு முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது.