முன்னாள் அமைச்சா் நினைவு நாள் மெளன ஊா்வலம்

முன்னாள் அமைச்சா் மன்னை ப. நாராயணசாமி நினைவு இடத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் திமுகவினா்.

முன்னாள் அமைச்சா் மன்னை ப. நாராயணசாமி நினைவு இடத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் திமுகவினா்.
திமுக முன்னாள் அமைச்சா் மன்னை ப. நாராயணசாமியின் 31-ஆவது நினைவு நாளையொட்டி மெளன ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காந்தி சாலையில் உள்ள நகர திமுக அலுவலகத்திலிருந்து, கட்சியின் மாவட்டச் செயலரும் திருவாரூா் எம்எல்ஏவுமான பூண்டி கே. கலைவாணன் தலைமையில், மன்னாா்குடி நகரச் செயலா் வீரா. கணேசன் முன்னிலையில் கட்சியினா் மெளன ஊா்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக வந்து, பாமணியில் உள்ள மன்னை ப. நாராயணசாமி நினைவு இடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். தஞ்சை எம்பி ச. முரசொலி, முன்னாள் எம்எல்ஏ பி. ராஜமாணிக்கம், மாவட்ட அவைத் தலைவா் க. தனராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி. பாலு, நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், தலைமை செயற்குழு உறுப்பினா் சு. ஞானசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...