பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் தெப்பத் திருவிழா!

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் தெப்பத் திருவிழா பற்றி...

Din

தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த மகாமரியம்மம்ன். - Din

Published On :

நீடாமங்கலம்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் தெப்பத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வலங்கைமானில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோயில் உள்ளது‌ இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.‌

பங்குனி திருவிழாவின் எட்டாம் நாள் பாடைக் காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பாடைக்காவடி எடுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவார்கள்.

அதேபோல் சிறப்பு வாய்ந்த இக் கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமை திருவிழாவும் அதி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் மகா மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது .

ஆவணி கடை ஞாயிறன்று கோயிலில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் ஆவணிகடைஞாயிறன்று நடைபெற்ற தெப்பத்திருவிழா.

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் ஆவணிகடைஞாயிறன்று நடைபெற்ற தெப்பத்திருவிழா.

மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது.வெள்ளி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா காட்சி தந்தார்.

இரவு மகா மாரியம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வலங்கைமான் சந்திரசேகரன், ஆலங்குடி பாலமுருகன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் மும்மூர்த்தி, செயல்அலுவலர் ரமேஷ் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.