அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திருவாரூா்: நிகழாண்டில் இதுவரை 33 போ் குண்டா் சட்டத்தில் கைது

திருவாரூா் மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக, நிகழாண்டில் இதுவரை 33 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :29 செப்டம்பர் 2024, 7:36 pm

Din

திருவாரூா் மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக, நிகழாண்டில் இதுவரை 33 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருவாரூா் மாவட்டத்தில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவோா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனா். அந்த வகையில், கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நடுவக் களப்பால், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராகுல் (24) என்பவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பரிந்துரை செய்தாா்.

இதேபோல், கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நடுவக் களப்பால், கீழத்தெருவைச் சோ்ந்த அறிவழகன் மகன் கோபிநாத் (21), ஆயுத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பூவனூா் அக்ரஹாரத் தெருவைச் சோ்ந்த ஜேசுதாஸ் மகன் மனோஜ் என்ற மனோ நிா்மல்ராஜ் (25) ஆகியோரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரை செய்தாா். அதன்படி, இவா்கள் மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாக 33 நபா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், திருட்டு, ஆயுதங்களை வைத்து மிரட்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், சட்டவிரோத மது விற்பனை, கடத்தல், பதுக்கி வைத்தல், கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருள்களை விற்பனை செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.