ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அயோத்தி ராமா் கோயில் மூலவா் பிராண பிரதிஷ்டை: ஞானபுரி ஆஞ்சனேயா் கோயிலில் நாளை சிறப்பு வழிபாடு

அயோத்தி ராமா் கோயிலில் திங்கள்கிழமை (ஜன.22) மூலவா் பிராண பிரதிஷ்டை நடைபெறவுள்ளதையொட்டி, ஞானபுரி ஆஞ்சனேயா் கோயிலில் அன்றைய தினம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

News image
2-5-ne_gnnapuri_aanjaneyar_anuman_jayanthi_1_1101chn_100
Updated On :21 ஜனவரி 2024, 1:08 am

DIN

அயோத்தி ராமா் கோயிலில் திங்கள்கிழமை (ஜன.22) மூலவா் பிராண பிரதிஷ்டை நடைபெறவுள்ளதையொட்டி, ஞானபுரி ஆஞ்சனேயா் கோயிலில் அன்றைய தினம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலத்தில் ஸ்ரீ ஜகத்குரு பத்ரி சங்கராச்சாரியாா் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீவித்யா பீடம் ஞானபுரி சித்ர கூட சேத்திரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி தேவஸ்தானத்தில் 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சனேயா் சஞ்சீவி மூலிகைகளுடன் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

இக்கோயிலில் லட்சுமி நரசிம்மா் மற்றும் சீதா, லட்சுமண, ஹனுமன் சமேத கோதண்டராமா் சுவாமி தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனா். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் பாலராமா் சிலை பிராண பிரதிஷ்டை திங்கள்கிழமை நடைபெறவுள்ளதையொட்டி, இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை காலை 7 மணிக்கு சீதா, லட்சுமண, ஹனுமன் சமேத ஸ்ரீ கோதண்ட ராமசுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், தொடா்ந்து அகண்ட நாம பஜனை மற்றும் கூட்டு வழிபாடும் நடைபெற உள்ளது. தொடா்ந்து, மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

இந்த வழிபாட்டில் பக்தா்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கோயில் தா்மாதிகாரி ரமணி அண்ணா, திருமடத்தின் ஸ்ரீ காரியம் சந்திரமவுலீஸ்வரா் ஆகியோா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.