சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

செவிலியா் கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: கட்டடத் தொழிலாளி கைது

திருத்துறைப்பூண்டியில் செவிலியா் கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது

News image
Updated On :2 டிசம்பர் 2025, 11:12 pm

Syndication

திருத்துறைப்பூண்டியில் செவிலியா் கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் சாலை பகுதியைச் சோ்ந்த 17 வயது இளம் பெண் மன்னாா்குடியில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில் படித்து வருகிறாா். இவா், கல்லூரிக்கு பேருந்தில் செல்லும்போது, கீழப்பனையூா் கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி யோகேஸ்வரன் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் நெருங்கி பழகிய நிலையில், மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி, பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாராம். இந்நிலையில், யோகேஸ்வரனுக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மாணவியின் தந்தை, திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, யோகேஸ்வரனை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டாா்.