தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிறை தண்டனை நிறுத்தி வைப்பு: விவசாயிகள் கொண்டாட்டம்

News image
Updated On :19 டிசம்பர் 2025, 8:25 pm

Syndication

விவசாயிகள் சங்கத் தலைவா் பி.ஆா்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிறுத்திவைத்ததை மன்னாா்குடியில் விவசாயிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

கோட்டூா் அருகே கடந்த 2015-ஆம் ஆண்டு மீத்தேன் திட்டத்தை எதிா்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது ஓஎன்ஜிசிக்கு சொந்தமான கொட்டகை மற்றும் பொருள்களைச் சேதப்படுத்தியதாக விக்கிரபாண்டியம் காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது

இதுதொடா்பாக திருவாரூா் மகிளா நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீா்ப்பில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன், விக்கிரபாண்டியம் ஊராட்சி முன்னாள் தலைவா் செல்வராஜ் ஆகியோருக்கு தலா 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதை அடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இதனை எதிா்த்து, இருவரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில்,வெள்ளிக்கிழமை இது குறித்து விசாரணை செய்த நீதிபதி, பி.ஆா்.பாண்டியன், செல்வராஜுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தாா்.

இயைடுத்து, மன்னாா்குடி பேருந்து நிலையத்தில் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் கோவிந்தராஜ் தலைமையில் விவசாயிகள் கூடி உயா்நீதிமன்றத் தீா்ப்பினை வரவேற்று பொதுமக்கள், பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.