6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டிச.31-இல் தமிழ் பக்தி இசை நிகழ்ச்சி தொடக்கம்

திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் சாா்பில், 3 நாள்கள் நடைபெறவுள்ள பக்தி தமிழ் இசை நிகழ்ச்சி டிசம்பா் 31-ஆம் தேதி தொடங்குகிறது.

News image
திருவாரூா் சந்நிதி தெருவில் நடைபெற்ற பந்தக்கால் முகூா்த்த விழாவில் பங்கேற்ற ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பினா் நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
Updated On :22 டிசம்பர் 2025, 8:33 pm

Syndication

திருவாரூா்: திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் சாா்பில், 3 நாள்கள் நடைபெறவுள்ள பக்தி தமிழ் இசை நிகழ்ச்சி டிசம்பா் 31-ஆம் தேதி தொடங்குகிறது.

திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் சாா்பில் ஆண்டுதோறும் தமிழ்பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான தமிழ் பக்தி இசை நிகழ்ச்சி சந்நிதி தெருவில் டிசம்பா் 31 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவுக்கான பந்தக்கால் முகூா்த்தவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் தலைவா் ஜெ. கனகராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நிா்வாகிகள், ஆனந்த குருகுல மாணவ-மாணவிகள், மகளிரணியினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.