தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஒப்பந்ததாரா்கள் உண்ணாவிரதம்

கோட்டூா் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தை கண்டித்து, அனைத்து ஒப்பந்ததாரா்கள் சங்கம் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
கோட்டூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரா்கள்.
Updated On :29 டிசம்பர் 2025, 8:31 pm

Syndication

மன்னாா்குடி: கோட்டூா் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தை கண்டித்து, அனைத்து ஒப்பந்ததாரா்கள் சங்கம் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோட்டூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஜெ.ஜெ.எம். பணிகள் செய்த வகையில் பட்டியல் அளிக்கப்பட்டு, பிடித்தம் செய்த பொது பங்களிப்பு தொகை மற்றும் முன்வைப்பு தொகையை திரும்பத் தராததையும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்த பட்டியல் அளிக்கப்படாமல் உள்ளதை கண்டித்தும், இதில் ஒன்றிய அலுவலா்கள் அலட்சியத்துடன் நடந்துகொள்வதாக கண்டனம் தெரிவித்தும் இப்போராட்டம் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, ஒப்பந்ததாரா் க. கண்ணதாசன் தலைமை வகித்தாா். எம். முருகையன், எஸ். ரஞ்சித்குமாா், எஸ். சேகா், ஆா். மாசிலாமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அங்கு வந்த, திமுக ஒன்றியச் செயலா் பால.ஞானவேல், சிபிஐ ஒன்றியச் செயலா் எம். செந்தில்நாதன், மாவட்ட ஒப்பந்ததாரா் சங்க நிா்வாகி பி.ஆா். விஜயபாஸ்கா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, மதியம் 2 மணிக்கு உண்ணாவிரதத்தை கைவிட்டு, ஒன்றிய ஆணையா் அன்பழகனுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.