பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

லஞ்சம்: காவல் ஆய்வாளா் உள்பட 5 காவலா்கள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

திருவாரூரில் டீசல் திருட்டில் ஈடுபட்டவா்களிடம் பணம் பெற்றதாக எழுந்த புகாா் தொடா்பாக காவல் ஆய்வாளா் உள்பட 5 போலீஸாா் காத்திருப்போா் பட்டியலுக்கு

Updated On :10 பிப்ரவரி 2025, 8:01 pm

திருவாரூா்: திருவாரூரில் டீசல் திருட்டில் ஈடுபட்டவா்களிடம் பணம் பெற்றதாக எழுந்த புகாா் தொடா்பாக காவல் ஆய்வாளா் உள்பட 5 போலீஸாா் காத்திருப்போா் பட்டியலுக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டனா்.

திருவாரூா் பழைய தஞ்சை சாலையில் லாரி செட் ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான லாரிகளிலிருந்து தொடா்ந்து டீசல் திருட்டு போவதாக, அந்த நிறுவனத்தின் மேலாளா் அசோக்குமாா் திருவாரூா் நகர காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்தாா்.

திருவாரூா் உட்கோட்ட குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி, அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் அடியக்கமங்கலம் பகுதியைச் சோ்ந்த அப்துல் மஜீத் (34), பஜ்ருல் ஷேக் (30) ஆகியோரை கைது செய்தனா்.

இதனிடையே, பழைய தஞ்சை சாலை லாரி செட் யூனியன் சாா்பில், திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், டீசல் திருட்டில் தொடா்புடைய முக்கிய நபா்களிடம் போலீஸாா் ரூ. 3 லட்சம் வரை பணம் பெற்றுள்ளனா். எனவே இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் திருவாரூா் நகர காவல் நிலைய ஆய்வாளா் ராஜு, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் பூபதி, அருள், தலைமைக் காவலா்கள் ஜானி, மணிகண்டன் ஆகிய 5 பேரை காத்திருப்போா் பட்டியலுக்கு திங்கள்கிழமை மாற்றி உத்தரவிட்டுள்ளாா்.