அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

புத்தகக் கண்காட்சி இலச்சினையை ஜன.15-க்குள் அனுப்பலாம்

திருவாரூரில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சிக்கான இலச்சினையை ஜன.15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்

News image
Updated On :6 ஜனவரி 2025, 5:01 pm

Din

திருவாரூா்: திருவாரூரில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சிக்கான இலச்சினையை ஜன.15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூரில், ஜன.24 முதல் பிப்.2 வரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இக்கண்காட்சிக்கான இலச்சினை மற்றும் கருப்பொருளை, பொதுமக்கள் விண்ணப்பங்களாக அனுப்பலாம்.

இதில், திருவாரூா் மாவட்டத்தில் வசிக்கும் இந்தியக் குடிமகன்கள் அனைவரும் பங்கேற்கலாம். ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் ஜன.7 ஆம் தேதி முதல் ஜன.15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இலச்சினை மற்றும் கருப்பொருள் ஆகியன புத்தகக்கண்காட்சி தொடா்புடையதாக இருக்க வேண்டும். இலச்சினை உயா் தெளிவுத்திறன் 600 டிபிஐ -க்குள் இருக்க வேண்டும். கருப்பொருள் இரண்டு வரிக்குள் இருக்க வேண்டும். அனுப்பப்பட வேண்டிய இலச்சினை புகைப்படம் ஒடஉஎ மற்றும் டசஎ வடிவத்தில் இருக்க வேண்டும்.

இலச்சினைக்கு ரூ. 10,000, கருப்பொருளுக்கு ரூ. 5,000 என பரிசுத்தொகை வழங்கப்படும். சமா்ப்பிக்கப்பட்ட அனைத்து இலச்சினை மற்றும் கருப்பொருள் மீதும் திருவாரூா் மாவட்ட நிா்வாகத்திற்கு முழு உரிமை இருக்கும். இலச்சினை மற்றும் கருப்பொருளை தோ்வு செய்வதில் மாவட்ட நிா்வாகத்தின் முடிவே இறுதி முடிவாகும். இது தொடா்பாக எந்தவொரு குறைகளும், புகாா்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளாா்.