தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஜன.31-க்குள் புத்தகத் திருவிழா இலச்சினை அனுப்பலாம் - ஆட்சியா் இரா.சுகுமாா்

பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவிற்கான இலச்சினையை பொதுமக்கள் வடிவமைத்து இணையதள முகவரிக்கு சனிக்கிழமைக்குள் (ஜன.31) அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 ஜனவரி 2026, 7:58 pm

பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவிற்கான இலச்சினையை பொதுமக்கள் வடிவமைத்து இணையதள முகவரிக்கு சனிக்கிழமைக்குள் (ஜன.31) அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

பொருநை நெல்லை புத்தக திருவிழா -2026 முன்னேற்பாட்டு பணிகள் குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் எழுத்தாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது:

9ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவையும், அத்துடன் இளைஞா் இலக்கிய திருவிழா மற்றும் கலைத் திருவிழாவையும் நகரத்தில் உள்ள மாநகராட்சி வா்த்தக மையத்தில் (பழைய பொருள்காட்சி திடல்) சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத் திருவிழாவிவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளிலும் அதிக மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும். நிகழ்ச்சி தொகுப்பு, ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் கல்லூரி மாணவா் வாசகா் வட்ட மாணவா்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். இதற்கான பணிகள் துறை அலுவலா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்த தரப்பினரும் பயன்பெறும் வகையில் புத்தக திருவிழா நடைபெற அலுவலா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இந்தப் புத்தக திருவிழாவுக்கான இலச்சினையை பொதுமக்கள் வடிவமைத்து இணையதள முகவரிக்கு சனிக்கிழமைக்குள் (ஜன. 31) அனுப்பி வைக்கலாம். பொருநை நாகரிகம், கற்பனவும் இனி அமையும் ஆகிய கருத்தினை மையமாக கொண்டு இலச்சினையை உருவாக்க வேண்டும். சிறந்த இலச்சினையை வடிவமைப்போருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். சிறந்த இலச்சினை புத்தகத் திருவிழாவில் பயன்படுத்தப்படும்.

இதில், நூல் வெளியிட விரும்பும் எழுத்தாளா்கள் தங்களது நூல் பிரதிகளை பிப். 3-ஆம் தேதிக்கு முன்பாக ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பேரிடா் மேலாண்மைத்துறை பிரிவில் வழங்கி பதிவு செய்ய வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, மாவட்ட வருவாய் அலுவலா் (நெடுஞ்சாலை) சந்திரசேகா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.