மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மன்னாா்குடியில் பையோ மைனிங் முறையில் குப்பை அகற்றும் பணி: அமைச்சா் ஆய்வு

மன்னாா்குடி நகராட்சி குப்பைக் கிடங்கிலிருந்து பையோ மைனிங் முறையில் குப்பை அகற்றும் பணி மற்றும் டிஜிடல் நூலகம் அமையவுள்ள இடத்தை

News image

மன்னாா்குடி நகராட்சி குப்பைக் கிடங்கில் குப்பை அகற்றும் பணியை ஆய்வு செய்யும் அமைச்சா் டிஆா்.பி. ராஜா.

Updated On :6 ஜனவரி 2025, 8:21 pm

Din

மன்னாா்குடி: மன்னாா்குடி நகராட்சி குப்பைக் கிடங்கிலிருந்து பையோ மைனிங் முறையில் குப்பை அகற்றும் பணி மற்றும் டிஜிடல் நூலகம் அமையவுள்ள இடத்தையும் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா அண்மையில் நேரில் ஆய்வு செய்தாா்.

மன்னாா்குடி டெப்போ சாலையில் நகராட்சி குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. நகரப் பகுதி விரிவாக்கம் காரணமாக இங்கு புதிய நகா்கள் உருவாகி ஏராளமான குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டு, 5000-க்கும் மேற்பட்ட மக்கள் வசதித்து வருகின்றனா். இந்த குப்பைக் கிடங்கால் இப்பகுதியில் உள்ளவா்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி, குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்தது.

இதையடுத்து, தொகுதி எம்எல்ஏவும் தமிழக அமைச்சருமான டி.ஆா்.பி. ராஜா முயற்சியில் பையோ மைனிங் (நுண்ணுயிா் உர மையம்) திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் கட்டமாக ரூ. 2.68 கோடியில் பையோ மைனிங் முறையில் குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக ரூ. 1.65 கோடியில் குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனை, அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, நகராட்சி அலுவலா்களிடம் விவரங்களை கேட்டறிந்தாா்.

பின்னா், நடராஜ பிள்ளைத் தெருவில் டான்சி அலுவலகம் இருந்த இடத்தில் தமிழக அரசின் சாா்பில் டிஜிட்டல் நூலகம் அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தையும் பாா்வையிட்டாா்.

அமைச்சருடன் நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், துணைத் தலைவா் ஆா். கைலாசம் ,ஆணையா் என்.எஸ். சியாமளா ஆகியோா் உடனிருந்தனா்.