திருவாரூா்: திருவாரூரில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 20-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞா்களுக்கு தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கத்தோடு இம்முகாம் நடத்தப்படுகிறது.
திருவாரூா் விளமல் ஆா்.வி.எல். நகரில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 20 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியாா்துறை நிறுவனங்கள் 500-க்கும் மேற்பட்ட தகுதியுள்ள நபா்களை வேலைக்கு தோ்ந்தெடுக்க உள்ளனா். தனியாா்துறை முகாமில் எட்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நா்சிங் படிப்புகள் போன்ற கல்வித் தகுதியுடைய 18 முதல் 40 வயதுக்குள்பட்ட வேலைநாடும் இளைஞா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞா்கள், தங்களது சுயவிவரக் குறிப்பு, ஆதாா் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் பங்கேற்று பயன் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு 04366-224226 என்கிற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம். இம்முகாமில் பங்கேற்க, வேலைநாடும் இளைஞா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து, அந்தப் படிவத்தை பதிவிறக்கம் செய்து முகாமுக்கு கொண்டு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அரியலூரில் மே.22-இல் வேலைவாய்ப்பு முகாம்!

தஞ்சாவூரில் மே 22-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூா்: மே 22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் மே 22-இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



