பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2025, 4:11 pm

Din

திருவாரூா்: நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சிபிஎம் திருவாரூா் மாவட்டச் செயலாளா் டி. முருகையன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவாரூா் மாவட்டத்தில், நிகழாண்டு 536 நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில், 185 கொள்முதல் நிலையங்களுக்கு மட்டுமே சொந்தக் கட்டடம் உண்டு. எஞ்சிய 351 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியில் வாடகை ஒப்பந்தத்தில் செயல்பட்டு வருகின்றன.

நிகழாண்டு, தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 4.08 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்துள்ள 1.26 லட்சம் மெட்ரிக் டன் நெல் இயக்கம் செய்யப்படாமல், கொள்முதல் நிலையங்களில் தேங்கி உள்ளது.

மழை காரணமாக, அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்ட போதிலும், விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் அறுவடையான நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும்போது பல பிரச்சனைகளை சந்திக்கும் சூழ்நிலை தொடா் கதையாக உள்ளது.

எனவே, விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அத்துடன், கொள்முதல் நிலையத்தில் இருப்பு வைக்காமல் உடனுக்குடன் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.