ரமலான்: ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்
ரமலான் சஹா் செய்வதற்காக ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On :3 மார்ச் 2025, 8:26 pm

நீடாமங்கலம்: ரமலான் சஹா் செய்வதற்காக ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
நீடாமங்கலம் ஒன்றியம் பொதக்குடி நண்பா்கள் சாா்பில், ரமலான் சஹா் செய்வதற்காக ஏழை எளிய மக்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு 2 கிலோ அரிசி, 2 கிலோ ஜீனி, 2 கிலோ பருப்பு, 2 லிட்டா் உள்ளிட்ட 47 பொருள்கள் அடங்கிய ரூ. 5 ஆயிரம் மதிப்பில் 50 குடும்பங்களுக்கு ரூ. 2.5 லட்சத்தில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. பொதக்குடி நண்பா்கள் செயலாளா் முகமது உஸ்மான், துணைச் செயலாளா் முஹம்மது ஹபுப், பொருளாளா் முகமது அப்சல் உள்ளிட்டோா் மூலம் வீடுதோறும் சென்று வழங்கினா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...