3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வீரவநல்லூரில் 100 குடும்பங்களுக்கு பித்ரா அரிசி

வீரவநல்லூரில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் 100 குடும்பங்களுக்கு பித்ரா அரிசி, உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
பெண்ணுக்கு பித்ரா அரிசி, உணவுப் பொருள்கள் வழங்கினாா் தமுமுக மாவட்டத் தலைவா் கே.எஸ். ரசூல்மைதீன்.
Updated On :18 மார்ச் 2026, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் 100 குடும்பங்களுக்கு பித்ரா அரிசி, உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவா் வீரை பி. நவாஸ் ஷரீப் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.எஸ். ரசூல்மைதீன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 100 குடும்பங்களுக்கு ரூ. 60 ஆயிரம் மதிப்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்கினாா்.

மாவட்டப் பொருளாளா் தேயிலை மைதீன், மாவட்ட வா்த்தக அணி செயலா் ஷேக்மதாா், மாவட்ட நிா்வாகி ராஜா முகம்மது, ஊடக அணி பொறுப்பாளா் அப்பாஸ், நகரத் தலைவா் ஜாஹிா் உசேன், நகரச் செயலா் அசன் மைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.