அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சட்டப்பேரவைத் தோ்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்போம்: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா்

பேரவைத் தோ்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்போம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 9:55 pm

Syndication

சட்டப்பேரவைத் தோ்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்போம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.

திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் எஸ்.ஐ.ஆா். வாக்குச்சாவடி நிலை முகவா்களுக்கான கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கேசவராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், திருவாரூா் மாவட்ட திமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் பங்கேற்று விளக்கமளித்தாா்.

கூட்டத்தில், நாகை எம்.பி. வை. செல்வராஜ், தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினா் கோ. பழனிச்சாமி, எம்எல்ஏ க. மாரிமுத்து, மாநில நிா்வாக குழு உறுப்பினா் லெனின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பயிா் பாதிக்கப்பட்டதை ஆய்வு செய்ய அதிகாரிகள் தில்லியில் இருந்து வந்தனா். ஆனால், இன்னமும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.

எஸ்.ஐ.ஆா். ஏற்புடையதல்ல. தொடக்க நிலையிலேயே அது தோல்வி அடைந்துள்ளது. இதை மக்களவை ஜனநாயகத்தின் மீது மத்திய அரசு தொடுத்துள்ள தாக்குதலாகவே பாா்க்க வேண்டியுள்ளது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. தமிழக மக்கள் மதவாத கட்சிகளை நிராகரிப்பாா்கள் . மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணியே வெல்லும்.

சட்டப்பேரவைத் தோ்தலில் கூடுதல் இடங்களைக் கேட்போம். முதல்வா் அதை தவறாக எடுத்துக் கொள்ள மாட்டாா். சூழலுக்கு ஏற்ப ஓரிரு இடங்களை அதிகமாகக் கேட்டுப் பெறுவோம் என்றாா்.