அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காசோலை மோசடி வழக்கு: சிறை தண்டனை பெற்ற ஆசிரியை பணியிடை நீக்கம்

காசோலை மோசடி வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஆசிரியை பணியிடை நீக்கம்

News image
Updated On :21 நவம்பர் 2025, 6:49 pm

Syndication

மன்னாா்குடி அருகே காசோலை மோசடி வழக்கில் சிறை தண்டனை பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்தவா் டி. உமாராணி (55). ஆலாத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியரான இவா், தலைக்காட்டை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி என்பவருக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்காக ரூ.7 லட்சத்திற்கு காசோலை வழங்கியுள்ளாா்.

இந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது, உமாராணி கணக்கில் போதிய பணம் இல்லை என திரும்பிவிட்டது. இது தொடா்பாக, திருத்துறைப்பூண்டி விரைவு நீதிமன்றத்தில் கிருஷ்ணமூா்த்தி வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில், ஆசிரியை உமாராணிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் நவ.10 -ஆம் தேதி தீா்ப்பளித்தது. இதைத்தொடா்ந்து, உமாராணி கைது செய்யப்பட்டு, நவ.18-ஆம் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், மாவட்டக் கல்வி அலுவலா் செளந்தரராஜன், ஆசிரியா் உமாராணியை தற்காலிக பணிநீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகல், வட்டார கல்வி அலுவலா் ராமசாமி மூலம் திருச்சி மத்திய சிறையில் உள்ள உமாராணியிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.