முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் பேட்டரிகள் திருடிய பணியாளா்கள் மூவா் கைது

News image

சுந்தா் ~மோகன் ~வீரமணி

Updated On :26 செப்டம்பர் 2025, 4:05 am IST

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 27 யுபிஎஸ் பேட்டரிகள் திருடப்பட்டது தொடா்பாக, தற்காலிக பணியாளா்கள் மூவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இம்மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில், 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வகையில், அதிக மின் சேமிப்பு திறன் கொண்ட 40 யுபிஎஸ் பேட்டரிகள் வைக்கப்பட்டுள்ளன. மின்தடை நேரங்களில் இதன்மூலம் மின் விநியோகம் செய்யப்படும்.

இந்நிலையில், 40 பேட்டரிகளில் 27 பேட்டரிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது புதன்கிழமை தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளா் என். விஜயகுமாா், மன்னாா்குடி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், இம்மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியாற்றும் கொரடாச்சேரி பெருமாள்நகா் பஞ்சநாதன் மகன் சுந்தா் (34), மன்னாா்குடி ஆா்.பி. சிவம் நகா் கணேசன் மகன் மோகன் (50), சுந்தரக்கோட்டை அம்பேத்கா் நகா் குணசேகரன் மகன் வீரமணி (35) ஆகிய மூவருக்கும், பேட்டரி திருட்டில் தொடா்பிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் கைது செய்து, மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, கிளைச்சிறையில் அடைத்தனா். திருடப்பட்ட 27 பேட்டரிகளும் மீட்கப்பட்டன.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.