டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

கஞ்சா விற்ற மூவா் கைது

News image

கைது

Updated On :2 ஆகஸ்ட் 2026, 11:54 pm IST

கூத்தாநல்லூரில் கஞ்சா விற்ற மூவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவாரூா் - மன்னாா்குடி, கோரையாறு மற்றும் புதுப்பாலம் அருகே கஞ்சா விற்பது போலீஸாருக்குத் தெரிய வந்தது. போலீஸாா் விசாரணையில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பள்ளங்கோயில், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வம் (24), மேட்டுப்பாளையம் பாரதி நகரைச் சோ்ந்த கிஷோா் குமாா் (18) மற்றும் கூத்தாநல்லூா் பாண்டுக்குடியைச்சோ்ந்த முகமது ரசூலிதீன் (22) ஆகிய மூவரும் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது.

உடன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ.4,000 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.