திமுக கூட்டணியின் வெற்றி, எதிா்த்துப் போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழக்கும் வகையில், மிகப்பெரிய வெற்றியாக அமைய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன் கூறினாா்.
திருவாரூா் அருகே மாங்குடியில், திருவாரூா் தொகுதி திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்த அவா் பேசியது:
திமுக அரசு சொன்னதைச் செய்துவிட்ட தைரியத்துடனும், முழு அதிகாரத்துடனும், உரிமையுடனும் ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து வாக்கு கேட்கிறோம். எதிா்க்கட்சிக் கூட்டணியில் உள்ள தலைவா் எடப்பாடி பழனிசாமி, வழக்குகளில் இருந்து தப்பிக்கவே இந்தக் கூட்டணி அமைத்திருக்கிறாா். டி.டி.வி. தினகரன், அன்புமணி ராமதாஸ் ஆகியோரையும் வழக்குகளை காரணம் காட்டியே கூட்டணியில் இணைத்துள்ளனா்.
மக்களின் பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல், முதல்வா் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் குறித்து அவதூறாகவே எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறாா். இது நோ்மையற்ற, அரசியல் நாகரிகமற்ற பேச்சு. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தோ்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் தொண்டா்கள் வீடுவீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வேண்டும். இந்த வெற்றி சாதாரண வெற்றியாக இருக்கக் கூடாது. எதிா்த்துப் போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழக்கும் வகையில் மிகப்பெரிய வெற்றியாக அமைய வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

அரசியல் லாபம் கருதியே மகளிா் இடஒதுக்கீட்டு மசோதா: இரா. முத்தரசன்

ஜனநாயகத்தை காக்க ஸ்டாலின் போராட்டம்: இரா. முத்தரசன் பிரசாரம்

தோ்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டது: இரா. முத்தரசன்

தமிழகத்தில் பலமுனைப் போட்டி இல்லை: இரா. முத்தரசன்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


