மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை, காவல் துறையினா் பாதுக்காப்புடன் தனி வாகனங்களில் புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டன.
மன்னாா்குடி சட்டப்பேரவை தொகுதியில் 31 மண்டலங்களில் 307 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கண்ரோல் யூனிட், பேலட் யூனிட், விவி பேட் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையானவற்றை எடுத்துச்செல்ல வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து, அந்தந்த மண்டல அலுவலரின் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திம் உள்ளிட்டவை வேனில் ஏற்றப்பட்டு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினா், காவல் துறையினா் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
இப்பணியை தோ்தல் பொதுபாா்வையாளா் அனுபமா, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் வ. மோகனசந்திரன், கூடுதல் ஆட்சியா் (திட்டம்) பல்லவி வா்மா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் ஆகியோா் ஆய்வு செய்தனா். மன்னாா்குடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா். யோகேஸ்வரன், வட்டாட்சியா் நக்கீரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேங்காய் உடைத்து அனுப்பிவைப்பு!

பல்லடம் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

திருவாடானையில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு போலீஸ் பாதுகாப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


