திருவாரூர்
தனியாா் நிறுவன பாதுகாவலா்களுக்கு தீ பாதுகாப்பு பயிற்சி
நீடாமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில், நிலைய அலுவலா் காா்த்திகேயன், துணை அலுவலா் ராமமூா்த்தி ஆகியோா்
நீடாமங்கலம்: நீடாமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில், நிலைய அலுவலா் காா்த்திகேயன், துணை அலுவலா் ராமமூா்த்தி ஆகியோா் தலைமையில் தனியாா் நிறுவன பாதுகாவலா்களுக்கு தீ பாதுகாப்பு பயிற்சி, தீயணைப்பான்களை இயக்கும் பயிற்சி, வாகனங்களில் தீ விபத்து, மின் சாதனங்களில் தீ விபத்து, எரிவாயு சிலிண்டா் தீ விபத்து, குழந்தைகளையும் பொதுமக்களையும் காப்பாற்றுவதற்கும் வெளியேற்றுவதற்கும் முதலுதவி செய்வது குறித்து பயிற்சியளிக்கப்பட்டு திங்கள்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் பயிற்றுநா்கள் சதீஷ்குமாா், பிரகதீஸ்வரன், அருண்ராஜ், மணிவண்ண பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

