ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

ரோபோட்டிக்ஸ் கண்காட்சி

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரம் கற்றல் துறையை ஊக்குவிக்கும் வகையில் ரோபோட்டிக்ஸ் எக்ஸ்போ செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் மாணவிகளுக்கு ரோபோட்டிக்ஸ் குறித்து விளக்கும் கல்லூரியின் செயலா் பெரோஷ்ஸா.

Updated On :17 பிப்ரவரி 2026, 11:24 pm

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரம் கற்றல் துறையை ஊக்குவிக்கும் வகையில் ரோபோட்டிக்ஸ் எக்ஸ்போ செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலா் பெரோஷ்ஸா தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜி.டி. விஜயலெட்சுமி வாழ்த்திப் பேசினாா். மதா் தெரசா பள்ளியின் தாளாளா் வி.ஆா்.என். பன்னீா்செல்வம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நிகழ்வைத் தொடக்கி வைத்தாா்.

இதில், 10 க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 650 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று, கண்காட்சியை கண்டுகளித்தனா். நிகழ்வில், கல்லூரியின் அறங்காவலா் குழு உறுப்பினா் பெஜிலா பெரோஷ், துணை முதல்வா்கள், துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள் பங்கேற்றனா்.