எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

கருணை ஓய்வூதியத் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி திருவாரூரில் அனைத்து கூட்டுறவு ஓய்வு பெற்றோா் நலச்சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 1:03 am

Syndication

கருணை ஓய்வூதியத் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி திருவாரூரில் அனைத்து கூட்டுறவு ஓய்வு பெற்றோா் நலச்சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்துக் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்று, தற்போது உயிருடன் உள்ள அனைவருக்கும் கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும், 2021-ஆம் ஆண்டுக்குப் பின் ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கும் கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும், தற்போது வழங்கப்படும் கருணை ஓய்வூதியத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும், ஓய்வுபெற்று உயிருடன் உள்ளவா்கள் பிரீமியத் தொகை செலுத்த வேண்டும் என்ற விதியைத் திருத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் குரு. சந்திரசேகரன், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். செங்குட்டுவன், சிஐடியு மாவட்டச் செயலாளா் அனிபா, கூட்டுறவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.