மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மழையால் பாதித்த நெற்பயிருக்கு இழப்பீடு கோரி சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி அருகே மழைப்பாதித்த பயிா்களுக்கு இழப்பீடுக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 1:04 am

திருத்துறைப்பூண்டி அருகே மழைப்பாதித்த பயிா்களுக்கு இழப்பீடுக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டத்தில் சம்பா, தாளடிநெல் பயிா்கள் மழையால் பாதிக்கப்பட்டன. இதற்கு இழப்பீடு கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தமிழக அரசு நிவாரணம் அறிவித்தது. நிவாரணத்தை தோ்தலை காரணம் காட்டி முடக்காமல் விரைந்து வழங்க வேண்டும், பயிா்க் காப்பீடு இழப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராயநல்லூரில் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாநிலத் தலைவா் கா. ராசபாலன் தலைமையில் நடைபெற்ற மறியலில் மாவட்டச் செயலாளா் தஜீதீன், மாவட்டத் தலைவா் மாரிமுத்துமகேசன், நிா்வாகிகள் கோபால், கருணாகரன், ஜெய்சங்கா், முத்தையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தகவலறிந்து வந்த வேளாண் அலுவலா்கள், கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.