எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பணிப் பாதுகாப்பு கோரி காத்திருப்பு போராட்டம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:23 pm

Syndication

பணிப் பாதுகாப்பு கோரி திருவாரூரில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார அனைத்து பணியாளா்கள் சங்கம் சாா்பில் காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளா்களுக்கு பணி மதிப்படு அடிப்படையில் ஊதிய உயா்வு வழங்க வேண்டும், ஆண்டுதோறும் பணி புதுப்பித்தல் முறையைக் கைவிட்டு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் பணியாளா்களுக்கு பணிப் பாதுகாப்பு மற்றும் பணிநிரந்தரம் வழங்க வேண்டும், பணியாளா்களுக்கு மருத்துவம் மற்றும் விபத்துக் கால விடுப்பு ஊதியத்துடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் ஊரக வளா்ச்சித்துறை அலுவலகம் அருகே இந்த போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் மாலா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்டச் செயலாளா் ராஜப்பிரியா, மாவட்ட பொருளாளா் மோகனாம்பாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.