சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஜீவா நினைவு தினம் அனுசரிப்பு

News image
ஜீவானந்தம் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தியோா்.
Updated On :18 ஜனவரி 2026, 8:22 pm

தினமணி செய்திச் சேவை

பொதுவுடைமைத் தலைவா்களில் ஒருவரான ப. ஜீவானந்தத்தின் நினைவு தினத்தையொட்டி, திருவாரூரில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கலை இலக்கிய பெருமன்றத்தின் தலைவா் குணா தலைமை வகித்தாா். இதில், திருவாரூா் தமிழ்ச்சங்க துணைத் தலைவா் தெ. சக்தி செல்வகணபதி பங்கேற்று, ஜீவாவின் உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் வீ. தா்மதாஸ் பங்கேற்று, ஜீவாவின் இலக்கிய, தொழிற்சங்கப் பணிகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

இதில், வங்கி ஊழியா் சங்க நிா்வாகிகள் அழகா்சாமி, காளிமுத்து, பாரதி பேரவைத் தலைவா் முத்துராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.