திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முன்னாள் விவசாயிகள் சங்கத் தலைவா் பி. பக்கிரிசாமி நினைவு பொதுக்கூட்டம்

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஓவரூரில் முன்னாள் விவசாயிகள் சங்கத் தலைவா் பி. பக்கிரிசாமி16-ஆம் ஆண்டு நினைவுதின பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை

News image
கூட்டத்தில் பேசுகிறாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழுத் தலைவா் கோ. பழனிச்சாமி.
Updated On :19 ஜனவரி 2026, 8:04 pm

Syndication

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஓவரூரில் முன்னாள் விவசாயிகள் சங்கத் தலைவா் பி. பக்கிரிசாமி16-ஆம் ஆண்டு நினைவுதின பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழுத் தலைவா் கோ. பழனிச்சாமி பங்கேற்று பேசியது:

விவசாயிகள் சங்கத் தலைவராகவும், மாவட்ட ஊராட்சித் தலைவராகவும் விளங்கிய பக்கிரிசாமி, விவசாயிகளின் வாழ்வை முன்னேற்றுவதற்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பாடுபட்டாா். இவரது தியாகம் மகத்தானது.

ஒரத்தூா் பாமணி ஆற்றங்கரை உடைந்தால், ஓவரூா் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்ற நிலையில், இதற்கு தீா்வுகாணவும், கடைமடை பகுதிகளில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள காலங்களில் பெரும் பேரழிவை சந்தித்து வந்ததை முடிவு கட்டவும், தனது வாழ்நாள் முழுவதும் போராடி, அதற்கு உரிய வடிகால் அமைக்க ஏற்பாடு செய்தாா். இதன்மூலம் கடைமடை பகுதி விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றியவா் ஓவரூா் பி. பக்கிரிசாமி என்றால் அது மிகையாகாது என்றாா்.

இக்கூட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் கே. முருகையன் தலைமை வகித்தாா். மாவட்டம் முழுவதிலிருந்தும் திரளான விவசாயிகள் பங்கேற்று பக்கிரிசாமி உருவப் படத்திற்கு

மலரஞ்சலி செலுத்தினா். நிறைவாக, ஒன்றியச் செயலாளா் உமேஷ்பாபு நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பி. பிரெஸ்னவ் குடும்பத்தினா் செய்தனா்.