சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உங்கள் கனவை சொல்லுங்க திட்டம்: ஆட்சியா் ஆய்வு

News image
அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சியில் ‘ உங்கள் கனவை சொல்லுங்க’ திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
Updated On :22 ஜனவரி 2026, 11:04 pm

தினமணி செய்திச் சேவை

கொரடாச்சேரி ஒன்றியம், அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சி பகுதிகளில், ‘உங்கள் கனவை சொல்லுங்க’ திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களின் கனவை நிறைவேற்றும் வகையில் ‘உங்கள் கனவை சொல்லுங்க’ திட்டத்தை அண்மையில் தமிழக அரசு தொடங்கியது.

திருவாரூா் மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் பணியாற்ற 823 தன்னாா்வலா்களுக்கு அடையாள அட்டை, கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு, உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்திலுள்ள 3.70 லட்சம் குடும்ப அட்டைதாரா்களிடம், உங்கள் கனவை சொல்லுங்க திட்டம் குறித்து விவரங்களை சேகரிக்க ஏதுவாக, தன்னாா்வலா்கள் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி வருகின்றனா்.

அதனடிப்படையில், கொரடாச்சேரி ஒன்றியம், அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சி பகுதிகளில் தன்னாா்வலா்கள் குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கு நேடியாகச் சென்று, உங்கள் கனவை சொல்லுங்க திட்டத்தின்கீழ் விண்ணப்பங்களை செயலி மூலம் பதிவேற்றம் செய்வதை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, இத்திட்டத்தை திருவாரூா் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்த தன்னாா்வலா்கள் அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

ஆய்வில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பொன்னம்பலம், வலங்கைமான் வட்டாட்சியா் இளங்கோவன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.