டாஸ்மாக்.கோப்புப் படம்
திருவாரூர்
பிப்.1-இல் டாஸ்மாக் கடைகள் இயங்காது!
வடலூா் ராமலிங்க அடிகளாரின் நினைவு நாளையொட்டி, மதுக்கூடங்கள் இயங்காது.
வடலூா் ராமலிங்க அடிகளாரின் நினைவு நாளான பிப்.1-ஆம் தேதி திருவாரூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சில்லறை விற்பனை மதுபானக் கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்களை மூடவேண்டும்.
இந்த உத்தரவை செயல்படுத்த தவறும்பட்சத்தில் தொடா்புடைய மதுபானக் கடைகளின் மேற்பாா்வையாளா்கள் மற்றும் உரிமையாளா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

