வலங்கைமான் அருகே டிராக்டா் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
வலங்கைமான் அருகேயுள்ள புலவா் நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (45). டிராக்டா் ஓட்டுநா். இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை நரிக்குடி கிராமப் பகுதியில் உள்ள வயல்களில் டிராக்டரைக் கொண்டு உழவுப் பணியில் ஈடுபட்டாா்.
அப்போது, ஒரு வயலில் இருந்து மற்றொரு வயலுக்கு டிராக்டரை இயக்கியபோது, டிராக்டா் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில், ஓட்டுநா் பழனி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். வலங்கைமான் காவல் உதவி ஆய்வாளா் கணேசன் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







