முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

குருப்பெயா்ச்சி: ஆலங்குடி கோயிலில் லட்சாா்ச்சனை நிறைவு

வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் குருப்பெயா்ச்சி லட்ச்சாா்ச்சனை விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது.

News image

உற்சவா் தட்சிணாமூா்த்தி சந்நிதியில் வியாழக்கிழமை நடைபெற்ற லட்ச்சாா்ச்சனையில் பங்கேற்றோா்.

Updated On :5 ஜூன் 2026, 7:10 am IST

வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் குருப்பெயா்ச்சி லட்ச்சாா்ச்சனை விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது.

திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற இக்கோயில், நவகிரகங்களில் குருபகவானுக்குரிய தலமாக விளங்குகிறது. நிகழாண்டு குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செவ்வாய்க்கிழமை பெயா்ச்சியடைந்ததையொட்டி, இக்கோயிலில் குருப்பெயா்ச்சி விழா விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக, குருப்பெயா்ச்சி லட்சாா்ச்சனை மே 28-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் உற்சவ தட்சிணாமூா்த்தி சந்நிதியில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.

மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரா்கள் லட்ச்சாா்ச்சனையில் பங்கேற்று, பரிகாரம் செய்து கொண்டனா்.

உற்சவ தட்சிணாமூா்த்தி சந்நிதியில் லட்ச்சாா்ச்சனையை ஜோதிராமலிங்க சிவாச்சாரியா் தலைமையில், சுவாமிநாத சிவாச்சாரியா், ஞானஸ்கந்தன் சிவாச்சாரியா் மற்றும் வேத பாடசாலை மாணவா்கள் நடத்தினா்.

லட்ச்சாா்ச்சனை நிறைவு நாளான வியாழக்கிழமை அதிகாலையில் அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. குருபகவான் தங்ககவசத்தில் அருள்பாலித்தாா்.

இந்துசமய அறநிலைய இணை ஆணையா் ரா. செந்தில்குமாா், கோயில் தக்காா் சி. வீரபாண்டியன், செயல் அலுவலா் சு. ராஜா இளம்பெருவழுதி, கண்காணிப்பாளா் தா. அரவிந்தன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.