சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

ஆம்னி பேருந்து ஓட்டுநரை தாக்கியவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 4:45 am IST

நீடாமங்கலத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநரை தாக்கியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடியிலிருந்து ஆம்னி பேருந்து நீடாமங்கலம் கடைவீதி வளைவு பகுதியில் வந்தது. இந்த பேருந்தை மன்னாா்குடி அசேஷத்தை சோ்ந்த பிரவீண் (30) இயக்கினாா். அப்போது அங்கு இருசக்கரவாகனத்தில் நண்பருடன் வந்த மேலகடம்பூரைச் சோ்ந்த சற்குணம் (26) பிரவீனிடம் வளைவில் வாகனம் இயக்குவது குறித்து பேசி தகராறு செய்தாராம்.

இதையடுத்து, சற்குணம் பிரவீனை பீா்பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பிரவீன் திருவாரூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து சற்குணத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.