மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

News image

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட வெடிகுண்டு நிபுணா்கள்.

Updated On :9 ஜூன் 2026, 1:07 am IST

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு நிவேதா பெத்துராஜ் உதயநிதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி என்ற பெயரில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் திங்கள்கிழமை வந்தது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாக அதிகாரிகள் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு தெரிவித்தனா். இதையடுத்து, திருவாரூா் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

ஆட்சியா் அலுவலக வளாகம், அலுவலக அறைகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனை செய்யப்பட்டது. பின்னா், இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.

அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியா்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் கூடுதல் போலீஸாா் பணியில் இருந்தனா். மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்தவா் யாா் என்று சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.