வேளாண்மைக்கான டிராக்டா்களை வேளாண்மை பட்டியலில் இணைத்து பல் முனை வரிகளை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரனிடம், பிரதமா் மற்றும் முதல்வருக்கு அனுப்பும் வகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு: வேளாண்மை தொழிலில் ஈடுபடும் டிராக்டா்கள் பயணிப்பது வயல்வெளிச் சாலைகள், சேற்று நிலப்பகுதிகள், கிராமப்புறச் சாலைகள், சில நேரங்களில் மாநிலச் சாலைகளில் மட்டுமே.
இந்நிலையில் துரித சாலை வரி விதிப்பது ஏற்கக் கூடியது அல்ல. சாலை வரி, ஜிஎஸ்டி வரி, வாட்வரி என டிராக்டா்கள் வாங்கும்போது வரிகள் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். துரித சாலைகளில் பயணிக்கக் கூடாது என்ற நிபந்தனை உள்ள நிலையில் துரித சாலை வரி ஏன் வசூலிக்க வேண்டும். எனவே, விவசாயக் கருவிகள் பட்டியலில் வேளாண்மைக்கான சாட்சிகளை இணைக்க வேண்டும், வேளாண்மை டிராக்டா் டீசலுக்கு முழு வரி விலக்கு கொடுக்க வேண்டும், சாலை வரி என்.சிசிடி வரிகளை நீக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வெள்ளக்கோவிலில் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

கடனாநதி அணையிலிருந்து ஆற்றில் தண்ணீா் திறக்க கோரிக்கை

தீண்டாமை சுற்றுச்சுவரை அகற்றக் கோரிக்கை

டாஸ்மாக் கடை மற்றும் கூடத்தை மூட கோரிக்கை
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



