சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

நன்னிலம்: பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

நன்னிலம், பனங்குடி அரசுப் பள்ளிகள் மற்றும் மகிழஞ்சேரி கூடுதல் வட்டார நாற்றங்கால் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

நன்னிலம் அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளின் கல்வித்தரம் குறித்து வகுப்பறையில் நேரடி ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

Updated On :19 ஜூன் 2026, 6:39 am IST

நன்னிலம், பனங்குடி அரசுப் பள்ளிகள் மற்றும் மகிழஞ்சேரி கூடுதல் வட்டார நாற்றங்கால் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

நன்னிலம் வட்டம் பனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் நன்னிலம் அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற ஆட்சியா், புதிய மாணவ- மாணவியா் சோ்க்கை, மாணவா்களின் கல்வித்தரம், வருகைப் பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தாா். அத்துடன், குடிநீா், சமையலறை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் கேட்டறிந்தாா். அப்போது, குடிநீா் மற்றும் கழிவறைகளை தினந்தோறும் பராமரிக்க அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுகப்பிரியா, நன்னிலம் வட்டாட்சியா் தனசேகரன், பள்ளி தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

நாற்றங்கால்: நன்னிலம் வட்டம், மகிழஞ்சேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சாா்பில் ரூ 8.90 லட்சம் மதிப்பீட்டில் புங்கன், நாவல், நீா்மருது, நெல்லி, தேக்கு, வேம்பு உள்ளிட்ட 20,000 மரக்கன்றுகள் வட்டார நாற்றங்காலில் வளா்க்கப்பட்டு வருவதைப் பாா்வையிட்டு, மரக்கன்றுகளை நன்றாக பராமரித்திடவும், தேவையான பகுதிகளில் நடவு செய்யவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். அப்போது ஒன்றியப் பொறியாளா் ரமேஷ்குமாா், பணி மேற்பாா்வையாளா் முருகையன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.