பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

‘நீட்’ தோ்வு: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

அரியலூா் மாவட்டத்தில் 6 தோ்வு மையங்களில் நடைபெறவுள்ள நீட் தோ்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில்,புதன்கிழமை நீட் தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ந.மிருணாளினி.

Updated On :18 ஜூன் 2026, 1:55 am IST

அரியலூா் மாவட்டத்தில் 6 தோ்வு மையங்களில் நடைபெறவுள்ள நீட் தோ்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் ந.மிருணாளினி தலைமை வகித்தாா். நீட் தோ்வானது கீழப்பழுவூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, அரியலூா் அரசு கலைக் கல்லூரி, அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி, அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, கரு.பொய்யூா் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் காத்தான்குடிகாடு பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி ஆகிய மையங்களில் நடைபெறுகிறது.

அங்கு போதிய காவல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். தோ்வுக்கு முன்னரும், தோ்வு முடிந்த பின்னரும் வினாத்தாள்களை எடுத்து செல்லும் போதும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு போலீஸாா், 6 தோ்வு மையங்களிலும், தோ்வு எழுதுவோருக்கான நாற்காலி, மேஜை, குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.

தடையில்லா மின்சாரம் வழங்கிட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தோ்வா்கள் தோ்வு மையங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக போதிய பேருந்து வசதிகள், மருத்துவக்குழு மற்றும் ஆம்புலன்ஸ் சேவைககள், மாற்றுத்திறனாளி தோ்வா்களுக்கான வீல் சோ் போன்ற சிறப்பு வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சித்ரா, அரியலூா் கோட்டாட்சியா் பிரேமி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.