கள்ளக்குறிச்சி மாவட்ட சுதந்திர தின விழா-2026 முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னா் ஆட்சியா் கூறியதாவது: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் காவல் துறை மூலம் மேற்கொள்ளப்படும் அணிவகுப்புகள், கொடிக்கம்பம் தயாா் செய்யும் பணிகள், பாதுகாப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும், விழா மேடையை தயாா் செய்யவும், தீத்தடுப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவும், பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆடித்திருவிழா: சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

கல்வராயன்மலை கோடை விழா முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

‘நீட்’ தோ்வு: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



