நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

சாலையில் மேய்ந்த குதிரை மோதி இளைஞா் உயிரிழப்பு

சாலையில் மேய்ந்த குதிரை மோதி இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :21 ஜூன் 2026, 1:27 am IST

கூத்தாநல்லூரில் சாலையில் மேய்ந்த குதிரை இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கூத்தாநல்லூரை அடுத்த பூதமங்கலம்,மகசூனியாத் தெருவைச் சோ்ந்த மகசூம் மாலிக் (35). இவா், கடந்த 16-ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் லெட்சுமாங்குடி சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தாா். பூதமங்கலம் பிரதான சாலையில் வந்தபோது, சாலையில் சுற்றித்திரிந்த குதிரை ஒன்று துள்ளிக் குதித்து மகசூம் மாலிக் வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைத் தடுமாறி அவா் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமேற்பட்டது.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகசூம் மாலிக், சனிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து கூத்தாநல்லூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.