ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

கொள்முதல் நிலையங்களில் நெல் உலர வைக்கும் இயந்திரம்! - அமைச்சா் வெங்கடரமணன்

News image

கோவில்வெண்ணி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகளை ஆய்வு செய்த அமைச்சா் வெங்கடரமணன்.

Updated On :30 ஜூன் 2026, 12:41 am IST

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் நிலையங்களில் நெல் உலர வைக்கும் இயந்திரம் வசதி ஏற்படுத்தப்படும் என உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை அமைச்சா் வெங்கடரமணன் தெரிவித்தாா்.

நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா், விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா். தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:

கடந்த ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை வெளிமாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பியிருந்தால், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்திருக்காது. நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல்மணிகள் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படும்.

கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான தாா்ப்பாய், சாக்கு, சணல் உள்ளிட்டவைகள் இருப்பு வைக்கப்படும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் நிலையங்களுக்கு நெல் உலர வைப்பதற்கான இயந்திரம் கொண்டு வரப்படும்.

திருவாருா் மாவட்டத்தில் 70 ஆயிரம் நெல் மூட்டைகள் மட்டுமே தேங்கியுள்ளன. 30,000 மெட்ரிக் டன் கொள்ளளவில் நெல் சேமிப்புக் கிடங்கு கட்டப்பட்டு வருகிறது. விரைவில் அது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் வரை கொள்முதல் செய்யப்பட்டால்தான், பொதுமக்களுக்கு நல்ல அரிசியை வழங்க முடியும். அதிக சதவீதம் வைத்து நெல்லை கொள்முதல் செய்தால் பழுப்பு மற்றும் கருப்பு நிற அரிசியைதான் மக்களுக்கு வழங்க முடியும். முதல்வா் கூறியதுபோல அனைவருக்கும் தரமான அரிசி வழங்க வேண்டும் என்பதால் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் 5 கி.மீ. தூரம் உள்ள விவசாயிகளின் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும். வெளி மாநில நெல்லை ஒரு போதும் கொள்முதல் செய்ய முடியாது. மன்னாா்குடி அருகே சேமிப்புக் கிடங்கு கட்ட இரண்டு இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன என்றாா்.

பேட்டியின்போது, திருவாரூா் முதுநிலை மண்டல மேலாளா் சரவணன், துணை மேலாளா் (கொள்முதல், இயக்கம்) ரவிச்சந்திரன், வட்டாட்சியா் மகேஷ்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.