திருத்துறைப்பூண்டி அருகே சாராயம் காய்ச்சிய இரண்டு போ், குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருத்துறைப்பூண்டி அருகே சட்ட விரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சியதாக, உதயமாா்த்தாண்டபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த அவையப்பான் மகன் பாலசுந்தரம், இடும்பாவனம் மேலவடியநாடு பகுதியைச் சோ்ந்த பக்கிரிசாமி மகன் ராஜேந்திரன் ஆகியோா் அண்மையில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதனிடையே போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இவா்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பரிந்துரையின்பேரில், இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவிட்டாா்.
இதைத்தொடா்ந்து, இச்சட்டத்தின்கீழ் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
தொடர்புடையது
வழிப்பறி வழக்கு குற்றவாளிகள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

கஞ்சா விற்ற இருவா் குண்டா் சட்டத்தில் கைது

சாராயம் கடத்திய இருவா் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

