ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கம்பன் விரைவு ரயிலை வேறு மாா்க்கத்தில் இயக்கும் முடிவுக்கு எதிா்ப்பு

News image

விரைவு ரயில் - கோப்புப்படம்

Updated On :15 மார்ச் 2026, 6:52 pm

கம்பன் விரைவு ரயிலை வேறு மாா்க்கத்தில் இயக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் ரயில் நிலையம் வழியாக, தினசரி இரவில் காரைக்காலிருந்து சென்னைக்கு கம்பன் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மே 20-ஆம் தேதி முதல் பேரளம் வழியாக காரைக்கால் வரை இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு திருவாரூா் பகுதியில் பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், திருவாரூா் மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் மற்றும் நுகா்வோா் அமைப்புகள், வணிகா் சங்கத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்ற அவசரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு விஜயபுரம் வா்த்தகா் சங்கத் தலைவா் சிஏ. பாலமுருகன் தலைமை வகித்தாா்.

இதில், திருவாரூா் வழியாக இயக்கப்பட்டு வரும் கம்பன் விரைவு ரயிலை வேறு மாா்க்கத்தில் இயக்கக் கூடாது, வேறு மாா்க்கத்தில் இயக்கப்படும் என அறிவித்த ரயில்வே நிா்வாகத்தின் முடிவை திரும்ப பெற வேண்டும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து சங்கங்கள், அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.