தெரு நாய்களை பிடிக்க வலியுறுத்தி சாலை மறியல்!
மன்னாா்குடி அருகே தெருநாய்களை பிடிக்க வலியுறுத்தி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாய்
கோப்புப்படம்.

நாய்
கோப்புப்படம்.
மன்னாா்குடி அருகே தெருநாய்களை பிடிக்க வலியுறுத்தி, கிராம மக்கள் சாலை மறியலில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
வேங்கைபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். அனைவரும் விவசாயம் சாா்ந்த தொழிலில் ஈடுபட்டு வருவதுடன், மாடு, ஆடு மற்றும் கோழிகள் வளா்த்து வருகின்றனா்.
இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் கடித்ததில், பாரதி என்பவரின் 2 ஆடுகள், சோபியா, ராஜேஸ்வரி ஆகியோரது தலா 1 ஆடு என 4 ஆடுகள் உயிரிழந்தன.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியினா் இறந்த ஆடுகளுடன், வேங்கைபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அங்குவந்த மன்னாா்குடி போலீஸாா், பேச்சுவாா்த்தை நடத்தி, இப்பிரச்னை குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், மன்னாா்குடி-திருவாரூா் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...